அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிவர்த்திப்பதற்கென சில தீர்வு நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளார்.

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கும், அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் பழிவாங்கும் வரிகளுக்கும் இடையே ஒரு வர்த்தகப் போர் உருவாகி வருவதாக ரணில் விக்ரமசிங்க குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலக சமூகத்தின் தற்போதைய வீழ்ச்சியில், இலங்கை போன்ற சிறிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்று அல்லது இரண்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கும், அமெரிக்கா முக்கிய சந்தையாகும்.

பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் கூட, ஏப்ரல் 2ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலைக்குக் கட்டணங்கள் திரும்பாது.

இது இலங்கையின் ஏற்றுமதிகளில் இடையூறுகளை ஏற்படுத்தி, தொழிற்சாலை மூடல்களுக்கும், பெரிய அளவிலான வேலை இழப்புகளுக்கும் வழிவகுக்கும். ஒட்டுமொத்த வெளிப்புற வர்த்தகம் பாதிக்கப்படுவதால், தீர்வை வரி மற்றும் மது வரியிலிருந்து மதிப்பிடப்பட்ட வருவாயை அரசாங்கத்தால் வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

இலங்கையில் மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால் அரசியல் அமைதியின்மை ஏற்படுவதற்கான பலத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த தேசிய கட்டணக் கொள்கை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here