துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. ஆனால் ஆட்டத்துக்குப் பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களுடன் கைகுலுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் குற்றம் சாட்டினார்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் உடனடியாக ஓய்வு அறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. நாணய சுழற்சியின்போதும் சூர்யகுமார் – சல்மான் ஆகா இடையே கைகுலுக்கல் நிகழவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்ததாக ஹெசன் தெரிவித்தார். ஆனால், போட்டிக்குப் பிந்தைய உரையில் சூர்யகுமார் தமது அணியின் வெற்றியை இந்தியா, பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அர்ப்பணித்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகள் மோதிய முதல் ஆட்டமாக இது கிரிக்கெட் வரலாற்றில் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here