ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி,

இந்திய அமைச்சரின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் அக்டோபரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது விஜயத்தின் போது, ​​எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் புதிய நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இரண்டு அரச அதிகாரிகளும் முன்னர் சந்தித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here