நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
அதன்படி, ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








