இம்முறை பாதீட்டில் இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியின் அளவு நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தாம் இந்த விடயத்தை எதிர்ப்பதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.







