ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (4/5/2025) முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.








