ஆஸ்திரேலிய அரசாங்கம் இன்று இலங்கை விமானப்படைக்கு (SLAF) Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்கியது.

இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும்.

“இந்த விமானத்தை இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கியது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது” என்று இலங்கை விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here