2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும் வகையில் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தமது கட்சியால் மட்டுமே முடியும் என சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

SJB கம்பஹா மாவட்டத் தலைவர் ஹர்ஷன ராஜகருணா ஏற்பாடு செய்திருந்த கிரிதிவெல பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டினார். “இந்த நாட்டை கடனில் இருந்து விடுவிப்பதற்கான சரியான தொலைநோக்கு பார்வையும் குழுவும் யாரிடம் உள்ளது என்பதை நாம் கவனமாக சிந்திக்க வேண்டும்” என்று பிரேமதாச கூறியுள்ளார்.

மூடப்பட்ட தொழில்களை மீண்டும் திறப்பது மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

இது கிட்டத்தட்ட 260,000 சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரிக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.

மேலும் பாராளுமன்றத்தில் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை சிறந்த முறையில் வழிநடத்தும் தலைமைத்துவம் எது என்பதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

வருவாயை அதிகரிக்கும், புதிய தொழில்களை ஆதரிக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த SJB தயாராக இருப்பதாகவும் பிரேமதாச கூறினார்.

இலங்கையை அதன் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து வெளியேற்றும் திறன் SJB க்கு உள்ளது என்று தனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரேமதாச, நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்க கட்சி தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here