தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த வைரஸ் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கண்டி மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது.

இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here