ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவு, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் மேலும் பலரை முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜயவர்தன மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








