தேங்காய் விலை உயர்வுக்கான முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறுவடை குறைந்த போதிலும், விலைகள் ரூ.200க்கு மேல் உள்ளன.
இதன்படி, சதோச மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சலுகை விலையில் தேங்காய்களை விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விலைகளை உறுதிப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் அறுவடை மீண்டும் குறையலாம் எனவும், மேலும் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் ஜெயக்கொடி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







