இலங்கை கிரிகெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் மேட்ச் பிக்சிங் வழக்கில் இன்று (8) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உபுல் தரங்க தற்சமயம் அமெரிக்காவில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







