எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி எடுத்த தீர்மானத்தையடுத்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், அதன் உறுப்பினர்கள், வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உட்பட மேலும் பலரை பிரதிவாதிகளாக பெயரிட்டு, டிஎன்ஏவின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மனுதாரர்கள் குற்றம் சாட்டி, தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

தேர்தல் அதிகாரியின் முடிவை செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட வாக்கெடுப்பை வழக்கின் விசாரணைக்கு வரும் வரை ஒத்திவைத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here