குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை பொலிஸார் மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளது.

இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலையை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் – கொழும்பு பிரதான வீதியில் வெஹெர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 6,000 லிற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிவாயு தொட்டிகள் உள்ளன. குருநாகலில் உள்ள ஒரு தனியார் துறை தொழிற்சாலையைச் சேர்ந்த லொறி ஒன்று 47 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெற்றோல் நிரப்பு நிலையத்தின் மேலாளர், பெற்றோல் நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர், பெற்றோல் சிலிண்டர்களை கொண்டு வந்த லொரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்குண்டவர்களின் உடல்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் எரிபொருள் நிரப்ப வந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here