அம்பகஸ்தோவ காவல்பிரிவிற்குட்பட்ட போம்புரு எல்ல நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை நீரில் மூழ்கிக் காணாமல் போன ஒருவரின் உடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ராகல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சுற்றுலாவிற்கு வந்த ஆறு ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆசிரியர் குழு உடப்புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.








