Saturday, May 9, 2026
No menu items!

காவல்துறையினர்

திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றநிலை –  பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு...

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு!

பொகவந்தலாவ மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்த ஐந்து பல்கலைகழக மாணவர்கள், இன்று (14) மோரா தோட்ட பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டபோது மரத்திலிருந்து குளவிக்கூடு விழுந்து அவர்களை தாக்கியது. இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்களும் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பொகவந்தலாவ காவல்துறையினர்...

வவுனியா பல்கலைக்கழக மாணவர் மரணம்: பகிடிவதை குற்றச்சாட்டு !

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயது மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் ஜயசிறிபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனினும், சில மணி...

இஷாரா செவ்வந்தி தலைமறைவு – மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறை தகவல்!

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட, அனைத்து தொடர்பாளர்களும் கைது செய்யப்படவுள்ளனர் என கூறப்படுகிறது. இந்தத் தொடர்பில் அவரது தொலைபேசி அழைப்புத் தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில்...

இலங்கையில் ஒரே நாளில் பல துயரச் சம்பவங்கள்: சாலை விபத்துகள், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல உயிரிழப்புகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல துயரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது. வரகாபொல பகுதியில், கித்துல்கலவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மோட்டார் சைக்கிள் மற்றும் இராணுவ கெப் வண்டி மோதியதில் உயிரிழந்தார். அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில்...

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிபகிஷ்கரிப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (07) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள், நீதிமன்ற உத்தரவு இன்றி காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் குமாரவடிவேல் குருபரன், “இது சட்டத்தின்...

வடக்கு, கிழக்கில் அதிகரித்து வரும் வெடிபொருள் மீட்பு சம்பவங்கள்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றை பண்படுத்தும் பணியின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், குறித்த வெடிபொருட்கள் இன்று அகற்றப்படவுள்ளதாக...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்க – கொடகம சந்தியில் பாரவூர்தி மோதி விபத்து: நால்வர் காயம்!

பாதுக்க – பொரளை வீதியில் கொடகம சந்திக்கு அருகில் இன்று (26) காலை சிறிய பாரவூர்தியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மீகொட காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரை நோக்கிச் சென்ற சிறிய பாரவூர்தி,...

தங்காலையில் 200 கிலோ போதைப்பொருள் 6 நவீன துப்பாக்கிகள் லொறியொன்றிலிருந்து பறிமுதல்!

தங்காலை பகுதியில் இடம்பெற்ற விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லொறியொன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த லொறி, போதைப்பொருளுடன் தங்காலை பகுதியில் இயக்கப்படுகையில், பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இதன்போது மேற்கொண்ட சோதனையின் போது, லொறியில் 6 நவீன துப்பாக்கிகள்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img