அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 19,637 வாகனங்கள் பயணித்துள்ள நிலையில், அதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here