யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15/1/2025) கரையொதுங்கிய மர்மவீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அண்மைக்காலமாக கடல் நிலையில்  மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.

அதன் போது மியன்மார்.தாய்வான்.தாய்லாந்து. மலேஷியா இந்தியா.போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரவு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிசார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும்,செப்பேடுகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிலைகள் உட்பட்ட பொருட்கள் தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

[ரட்னசிங்கம் – முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here