கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நேற்று (21.11.2024) பிற்பகல் நடைபெற்றது.

பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பெரிய பரந்தன் வட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here