முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிக் கொள்கைகளை இயக்குவதைத் தடுத்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (0) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களின் 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வங்கி நிலையான வைப்புக்கள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இன்று முடிவடைய இருந்தது.
ஆனால், விசாரணை நடந்து வருவதால் மேலும் 3 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, மருந்து தட்டுப்பாடு என்ற போர்வையில் தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைக்கு விநியோகித்து நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








