Tuesday, July 28, 2026
No menu items!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

மிலான் ஜயதிலக்க பிணையில் விடுவிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி...

மிலான் ஜயதிலக்க கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் !

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 1,250இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை 1,267 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 24 சோதனை நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் 20...

சற்றுமுன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, திங்கட்கிழமை (28) காலை 9:30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் ஆஜராகவுள்ளார்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் 15,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் நேற்று (11/03/2025) கைது செய்யப்பட்டார். அங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரையும் அவரது மனைவியையும் விடுவிப்பதற்கும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 3 ஆம் திகதி ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டது. சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர்...

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்தவர்கள்- இந்த மாத இறுதியில் கைது..!

கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்த பலர் இந்த ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்படவுள்ளதாக  செய்தியில் கூறப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது அந்தப் பணிகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் இருவர், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரும்...

கெஹலியவின் குடும்ப உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தடை- மேலும் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிக் கொள்கைகளை இயக்குவதைத் தடுத்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (0) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

கெஹெலியவிற்கு விதிக்கப்பட்ட தடை-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img