கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் பேருந்துக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு அனுபவம் உள்ளவர்களை தெரிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அனுபவம் மிக்க தலைமைத்துவம் இல்லாவிட்டால் இலங்கை மீண்டும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் அனுபவம் மிக்கவர்கள் குறைவு என தெரிவித்துள்ள அவர் எதிர்கால நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு அறிவுள்ள தலைமைத்துவம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.








