2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகிறது.

இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு, அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக ஆன்லைனில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு விண்ணப்பங்களை தங்கள் பாடசாலை முதல்வர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் பதிவு மூலமாகவும் தங்கள் தேர்வுகளை சமர்ப்பிக்கலாம்.

நவம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here