ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் முதல் பிரதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கண்டி குயின்ஸ் ஹோட்டலில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான விசேட ஊடக சந்திப்பில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here