சுதேச வைத்திய முறைக்கான தேசிய நிறுவனத்தின் யுனானி மருத்துவப்பிரிவின் ஏற்பாட்டில் உலக சுகாதார தாபனத்தின் நிதி அனுசரணையில் குறித்த செயலமர்வானது கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இன்றைய முதலாம் நாள் ஆரம்ப நிகழ்வு சுதேச வைத்திய முறைக்கான தேசிய நிறுவனத்தின் யுனானி மருத்துவப்பிரிவின் வைத்தியர் அமுதினி சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் ரீ-சர்வானந்தன், சிரேஸ்ட சமூக வைத்தியர் பி-சிறிகணேசன், கிளிநொச்சி மாவட்ட ஆயுள் வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஏ-அரவிந்தன், ஆயுள் வேத சமூதாய மருத்துவ திணைக்களத்தின் விரிவாக்கல் சேவை வைத்தியர் ஏ-பெரேரா, சுதேச வைத்திய முறைக்கான தேசிய நிறுவனத்தின் மருத்துவ பிரிவின் வைத்தியர் ஹேரத் பரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








