கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பல்லவராஜன் கட்டு சந்தியிலிருந்து கிராஞ்சி பொன்னாவெளி வரை 12கிலோ மீற்றர் தூரமான வீதி புனரமைப்பு பணிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (3/13/2025) காலை நடைபெற்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரி.பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 1412 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








