மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here