மலையக மார்க்கதிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து  தெமோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக  மலையக மார்க்கதிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here