2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு, தபால் மூல வாக்களிப்புக்கான இறுதி நாளாக செப்டம்பர் 12 ஆம் திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ளது.
ஆகவே அதற்கான கடைசி சந்தர்ப்பமாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
இன்றைய தினத்துக்குள் தபால் ஓட்டுகளை பதிவு செய்யாவிட்டால், அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








