திருகோணமலையில் உள்ள ஊத்தவாய்க்கால் ஆற்றில் நேற்றைய தினம் (03.11.2023) மாடு மேய்க்க சென்ற இடத்தில் ஒருவர் முதலை கடித்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் இடம்பெற்றுள்ளதுடன், முதலை கடித்து உயிரிழந்த நபர் சிப்பித்திடல் தம்பலகாமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான கே.சசிகுமார் (36 வயது) எனும் குடும்பஸ்தர் ஆவார்.

மற்றும் மாடு மேய்க்க இருவர் சென்ற இடத்தில் ஒருவரே காணாமல் போயுள்ளார்.இதனைத்தொடர்ந்து பொது மக்கள் தேடுதல் முயற்சியில் இறங்கி சடலத்தை மீட்டுள்ளனர்.இது தொடர்பில் ஆரம்ப கட்டிட விசாரணையில் மாடு மேய்க்க சென்றவர் முதலைக்கடியில் தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

பொது மக்கள் மீட்டெடுத்த சடலமானது திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here