ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர்ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லொழுக்கத்துறை மந்திரி காலித் ஹனாபி பேசியதாவது:

ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லா ஹு அக்பர் கோஷம் எழுப்ப அனுமதி கிடையாது. இஸ்லாமின் நம்பிக்கை வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here