யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று (02.01.2024) காலை தீ விபத்து ஏற்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்ததைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும், வேலாயுதம் ரவி என்கின்ற 38 வயதான நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தீ விபத்துக்கான காரணமானது இன்னமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here