மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மேலும்,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்,ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.







