இலங்கையின் நாட்டுப்புற கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நாட்டுப்புற கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களம் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இதற்காக ஒருங்கிணைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (செப் 08) நடைபெற்ற சமகி இலங்கை நாட்டுப்புற கலாச்சார மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.







