ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதன்போது நீரழிவு நோய் தீவிரமடைகின்றது. இதனால் பல அறிகுறிகள் உடலில் தோன்றும் அதுபற்றிய புரிதலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரழிவு நோயாளிகள்
அறிகுறிகள்: இரத்த குளுக்கோஸ் அளவுகள் உடல் நீரிழப்பு, தாகம் மற்றும் திரவங்களை உறிஞ்சும் திறனைக் குறைக்கும். இதனால் அதிக தாகம் ஏற்படும்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை சிறுநீரின் மூலம் வெளியேற்ற உடல் முயற்சிப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.
எப்போதும் போல் இல்லாமல் அதிகமாக பசி உணர்வு ஏற்படும். எதிர்பாராத எடை இழப்பை சந்திக்க நேரிடும். எதற்கெடத்தாலும் உடல் சோர்வாக உணர்தல்.
பார்வை திறன் மிகவும் மங்கலாக இருத்தல். இந்த நொய் உடலில் ஏற்பட்ட பின்னர் அதிக பதற்றம் வரும். சரியான நேரத்திற்கு பசி ஏற்படாது. குறைவான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்வீர்கள்.
உடல் பருமன் அதிகரிக்கும். சில வேளைகளில் இது மரபியல் காரணமாகவும் வரலாம். இந்த நோயின் மிகவும் முக்கியமான அறிகுறியாக இருப்பது தான் தசை உருகுதல். இது நீரழிவு நோய் தீவிரமானால் தான் காணப்படும்.

சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடல் பருமன் குறைப்பு
வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே குடிக்கவும்
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை பருகவும்
சுரைக்காய் சூப், சாறு மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்
தானியங்கள் மற்றும் அரிசி குறைக்க தினமும் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியை சாப்பிடுங்கள்
காலையில் 2 பல் பூண்டு சாப்பிடுங்கள் முட்டைக்கோஸ், பாகற்காய், சுரைக்காய் சாப்பிடுங்கள்









