எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்றாக செயற்படுவதே தங்கள் இலக்காகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவி்த்துள்ளார்.

திலித் ஜயவீர தலைமையில்,  ‘பதக்கம்சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம்(12) மாலை வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பொருத்தமான எதிர்க்கட்சியை உருவாக்கினால், அரசாங்கத்தை விட அதிகமான பணிகளைச் செய்ய முடியும்

நாங்கள் தேசியம் பற்றி பேசுகிறோம். இனவாதம் அல்ல. இலங்கையின் தேசியம் சிங்கள பௌத்த நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்ல பலர் பயப்படுகிறார்கள். இதைச் சொன்னால் மக்கள் கோபப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் இனவாதம் என்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அரசியல் செய்வதுதான் பிரச்சினை. இது தெற்கில் செய்யப்படுகிறது. வடக்கிலும் செய்யப்படுகிறது. நாங்கள் அதற்கு எதிரானவர்கள்.

நாட்டில் உள்ள அனைவரையும் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு கொண்டு வந்தால் இந்த நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்.

இப்போது நாம் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும். ஒரு உகந்த எதிர்க்கட்சி உருவானால், ஒரு அரசாங்கம் அதிக வேலைகளைச் செய்ய முடியும்.

ஒரு நல்ல எதிர்க்கட்சி எப்போதும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்பதில்லை. நாங்கள் துணிச்சலான எதிர்க்கட்சியாக இருப்போம் என திலித் ஜயவீர  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here