பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருகம்மோதர , பதுவத்த வீதியின் 7 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் மாட்டுவாகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம் பெற்ற வேளையில் முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரும் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here