2025 பிப்ரவரி 25 முதல் மார்ச் 02 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் விளைவாக ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, நான்கு மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் மோசமான வானிலை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இரண்டு மாவட்டங்களிலும் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வறட்சியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.







