Wednesday, April 29, 2026
No menu items!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து திட்டம்!

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான...

மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் பலி!

தற்போது சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததோடு, பலத்த மழை, கடும் காற்று, மின்னல் தாக்கம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த...

பாதகமான வானிலை – பாதிக்கப்பட்ட மக்கள்..!

2025 பிப்ரவரி 25 முதல் மார்ச் 02 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் விளைவாக ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, நான்கு மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் மோசமான வானிலை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இரண்டு மாவட்டங்களிலும்...

சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30.11.2024) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்!

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அம்பாறையில் 8 இறப்புகளும், பதுளை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 17 பேர்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வயோதிப பெண் உயிரிழப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண் ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம்...

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்ய விசேட வேலைத்திட்டம்!

தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கைப் பொலிஸாரும் இதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஒரு...

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள்..!

தீவை பாதிக்கும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (13 அக்டோபர் 2024)...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டைச் சூழவுள்ள  கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் (18.08) நாளையும் (19.08) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை...

ஆரம்பமாகியுள்ள கா பொ த உயர்தர பரீட்சை 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் கா பொ த உயர்தர பரீட்சை  ஆரம்பமாகவுள்ள நிலையில்  பரீட்சாத்திகளுக்கு   காலை  08 30 மணியளவில்  பரீட்சையானது ஆரம்பமாகியுள்ளது. இன்று இணைந்த கணிதம் மற்றும் சமய பாடங்களுடன் ஆரம்பமான பரீட்சையானது எதிர்வரும் 31ம் திகதி தொடர்பாடலும் ஊடக கற்கை நெறியுடன் முடிவடையவுள்ளது. குறிப்பாக இவ்வாண்டு பரீட்சையில்  346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 281,445...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img