பிரதமர் அலுவலகத்துக்காக நிறுவப்பட்ட மருத்துவப் பிரிவு நேற்று (நவம்பர் 05) அகற்றப்பட்டு மீண்டும் பொது சேவைக்கு வந்தது.
இந்த பிரிவில் உள்ளடங்கிய மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள், உபகரணங்கள், மருந்துகள், மற்றும் இரண்டு அம்பியூலன்ஸ்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியினால் சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பிரதீப் சபுதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவிடம் உரிய ஆவணங்கள் மற்றும் சாவிகளை சமர்ப்பித்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இந்த கையளிப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரிவில் உள்ள மனித மற்றும் பௌதீக வளங்கள் தற்போது சுகாதார அமைச்சின் கீழ் பொது சுகாதார தேவைகளுக்கு சேவை செய்ய திருப்பி விடப்படும் என பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.








