புதிதாக திருமணம் செய்து வந்த தன்னுடைய மருமகளை உமா ரியாஸ்கான் கொடுமை செய்தாக மரியா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நடிகர் ரியாஸ்கான்

தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ரியாஸ்கான்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடிப்பார்.

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை உமா- ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசன் மரியா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி மரியா ஜெனிபர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு வளர்ந்த பெண் பிள்ளையொன்றும் இருப்பதாக சமீபத்தில் பேட்டியொன்றில் ஓபனாக பேசியுள்ளனர்.

மாமியார் கொடுமை செய்த உமா ரியாஸ்கான்

இதனை தொடர்ந்து பிரபல ஊடகமொன்றிற்கு குடும்பமாக பேட்டிக் கொடுத்த போது மருமகள்- மாமியார் தொடர்பு எப்படி உள்ளது என்பது பற்றி பேசியுள்ளனர்.

அந்த வகையில் உமா ரியாஸ்கான் பேசுகையில், “ என்னுடைய மகன் ஷாரிக் அவருக்கு சரியான பெண்ணை தான் திருமணம் செய்துள்ளார். நானும் என்னுடைய கணவர் ரியாஸ்கானும் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் தான் எங்களுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மரியா, “தனது பெற்றோருக்கு ஷாரிக்கை மிகவும் பிடிக்கும். எனக்கு தான் அவர்களை அவ்வளவாக பிடிக்காது. என்னுடைய மாமியார் என்னை தமிழில் பேசுமாறு கூறினார்.

எனக்கு அந்தளவிற்கு தமிழ் தெரியாது, இது தான் மாமியார் செய்த கொடுமை. மேலும், ஷாரிக்கை விட என்னுடைய மாமனார், மாமியார் தான் அதிகமாக என் மீது உரிமை எடுத்து கொள்வார்கள். ஷாரிக்கை பற்றி என்ன புகார் இருந்தாலும் அதனை என்னுடைய மாமியார்- மாமனாரிடம் தான் முதலில் கூறுவேன்..” என பேசியுள்ளார்.

இவர்களின் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “இப்படியொரு குடும்பத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here