ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் சனிக்கிழமை (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

ஏறாவூர் பன்சாலை வீதியிலுள்ள உள்ள குறித்த கட்சியின் வேட்பாளரும் அவரது தாயாரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் ஒரு மணியளவில் முஸ்லீம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் 6 பேர் ஆதரவு கேட்டு அங்கு சென்று வேட்பாளரின் தாயாரிடம் சிறுபான்மையான நாங்கள் வாழும் இடம் எனவே பொரும்பான்மை இன கட்சியில் கேட்க கூடாது கண்டபடி ஏசியதையடுத்து வீட்டினுள் இருந்த வேட்பாளர் வெளியேவந்தபோது அவருக்கும் முஸ்லீம் கட்சி ஒன்றின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில்  அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டார் இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கு தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த வேட்பாளர் ஒர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here