போலியான குறுஞ்செய்தி மூலம் இடம்பெறும் மோசடி தொடர்பில்  மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு ஒரு மோசடியான குறுஞ்செய்தி பரப்பப்படுகிறது.

எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது  OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here