யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிலையில் இன்று நண்பகல் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.







