அரசாங்கம் விரைவில் சோள இறக்குமதியை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 600,000 மெட்ரிக் டன் தேவை உள்ள நிலையில், உள்ளூர் உற்பத்தி போதுமானதாக இல்லை. ஜனவரி 31 வரை கால்நடை தீவனத்திற்காக 275,000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், பெப்ரவரி 1 முதல் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

மக்காச்சோள சாகுபடியை 20,000 ஹெக்டேர்களாக விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், ஏப்ரல் 1 முதல் இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிசீலித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here