தியத்தலாவ பொக்ஸ் ஹில் பகுதியை அண்டிய மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு இலங்கை இராணுவத்தினர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத் தீ நேற்று முன்தினம் (27) ஏற்பட்டது. இதனை அடுத்து தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இராணுவத்தினர் உடனடியாக இணைந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







