கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் (28.03.2025) கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன் அவர்கள் தலைமையில் காலை 9 மணி அளவில் ஆரம்பமானது.

யாழ் மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் மற்றும் பொலிஸார், அதிரடிப்படையினர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]







