சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி’ என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.

சந்திரயான்-3-ன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி என பெயர் சூட்டி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் திகதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கோள்களுக்கு பெயர் சூட்டும் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு, பிரதமர் மோடி சூட்டிய“ சிவசக்தி” என்ற பெயரை தற்போது அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here