உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பான மாற்றங்களை முன்மொழியும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த மசோதாவை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பிரசுரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (7) அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 67 ஆக உயர்த்தப்படும். அதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படும். இந்த சட்ட வரைவு, பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் போது அல்லது பதவியில் 6 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் போது, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு பெறுவார் எனவும் குறிப்பிடுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் முயற்சிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் வெளியிட உத்தரவிடப்பட்டது.







