யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸாரின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.


இதன்போது வடக்கு மாகான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ. தனபால, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஶ்ரீமோகன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் மற்றும் பொஸிஸ் உத்தியோகத்தர்கள் சர்வ மதத் தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








